அரசாங்கத்தின் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பலர் பயன்பெற்றுவருகின்றனர். இத்திட்டத்தின் நோக்கம் வறுமையில் வாழும் 
குடும்பத்தினருக்கு வீட்டு வாடகை, பள்ளி போக்குவரத்து செலவு, மருத்துவ உதவி (சிறு நீரகப் பாதிப்புறறவர்கள்) போன்ற உதவிகளைச் செய்தல் ஆகும். அசகான் சட்டமன்றத்தில் வாழக்கூடிய ஏழை மக்களுக்கு இத்தகைய உதவிகள் இன்று ஞாலாஸ் ஜெப்ரொன் சேவை மையத்தில் வழங்கப்பட்டது. இன்று 38 குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் காசோலைகள் கொடுக்கப்பட்டன.
அசகானைச் சேர்ந்த குறன் என்பவர் சிறுநீரகச் சிகிச்சைக்கு ரிங். 12,000.00 ஆன காசோலையை மாண்புமிகு ஆர்.பெருமாள் அவர்களிடம் இருந்து பெறுகிறார்.